மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் தக்காரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கள் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவு வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

தியாகராஜர் பொறியியல் கல்லூரி இயக்குனராகப் பொறுப்பு வகித்து மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவி செய்த மனிதநேய பண்பாளர். அதுமட்டுமின்றி தொழில்துறை, கல்வித்துறை மற்றும் கோவில் திருப்பணி என அனைத்திலும் சிறந்து விளங்கி அனைவருக்கும் உதவி செய்த உயர்ந்த உள்ளம் கொண்டவர். அவருடைய மறைவு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. மேலும் அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.