ஆவின் நிறுவனம் சார்பாக குடிநீர் விற்கும் திட்டத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அதாவது “வரியும் பெற்றுக் கொண்டு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை வியாபாரம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

ஆகவே தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை உடனடியாக கைவிட்டு குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.