குடியரசு தினம் விழாவில் பட்டியல் சமூக ஊராட்சித் தலைவர்கள் கொடி ஏற்றுவதில் சாதிய பாகுபாடு இருக்க கூடாதென மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இருப்பதாவது, 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களின்போது பட்டியல் சமூக ஊராட்சித் தலைவர்களுக்கு கொடியேற்றுவதில் ஏற்பட்ட சாதிய பாகுபாடுகளை சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்நிலையில் வருகிற 26 ஆம் தேதி குடியரசு தின விழா இணக்கமாக நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். அந்த வகையில் விழாவில் பட்டியல் சமூக ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் எவ்வித சாதிய பாகுபாடும் இருக்கக்கூடாது. மேலும் கிராம சபைக் கூட்டங்கள் முடிந்தவுடன், பிரச்னையின்றி முடிந்ததா என்பதை உறுதி செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.