புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி வடசேரி ரோட்டில் பாலசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஸ்நேஷ்(24) என்ற மகன் உள்ளார். இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவரும் கறம்பக்குடியை சேர்ந்த பி.எஸ்.சி நர்சிங் பட்டதாரியான சுகன்யா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் காதலர்கள் நாகப்பட்டினத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சுகன்யாவுக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என பெண் வீட்டார் எழுதி கொடுத்து விட்டு சென்றனர். இதே போல மணமகனின் வீட்டாரும் எழுதி கொடுத்தனர். பின்னர் காதல் ஜோடியை போலீசார் அனுப்பி வைத்தனர்.