புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்காடு பகுதியில் ராஜா(22) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சின்ராஜ்(30), 17 வயது சிறுவன் ஆகியோரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜா, சின்ராஜ், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக காட்டிற்கு தூக்கி சென்றனர். பின்னர் 3 பேரும் இணைந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜா உட்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.