திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காளசமுத்திரம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லோடு வேன் டிரைவர். நேற்று காலை ராஜேஷ் லோடுவேனில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பூந்தமல்லி நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஐயப்பன்தாங்கல் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் உயர் அழுத்த மின்சார வயர்கள் பூமியில் பதிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்காக தோண்டப்பட்ட 6 அடி பள்ளத்தில் ராஜேஷ் ஓட்டி வந்த லோடு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ராஜேஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் உதவியுடன் வாகனத்தை மீட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.