பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனன்யா பாண்டே. பிரபல பாலிவுட் நடிகர் சுங்கி பாண்டேவின் மகளான அனன்யா பாண்டே பாலிவுட்டில் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் விஜய் தேவர கொண்டா நடித்த லைகர் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். தமிழிலும் ஒரு சில படங்களில் அனன்னயா பாண்டே நடித்துள்ளார். இந்தியாவில் நடிகை அனன்யா தற்போது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த திருமண நிகழ்ச்சியின் மெகந்தி விழாவின்போது நடிகை அனன்யா தோழிகளுடன் சேர்ந்து பிடித்த சிகெரெட் பிடித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் அனன்யாவுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் அழகான நடிகைக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா என்று ரசிகர்கள் வருத்தப்படும் நிலையில், இதேபோன்று சமீபத்தில் ரன்பீர் கபூர் மற்றும் மௌனி ராய் சேர்ந்து சிகரெட் பிடிக்கும் புகைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.