எல்ஐசி நிறுவனத்தில் பொது மக்களுக்கு பயனளிக்கும் விதமான பல்வேறு பாலிசிகள் இருக்கிறது. அந்த வகையில் தற்போது 10 லட்சம் முதலீடு செய்தால் 93 லட்சம் லாபம் கிடைக்கும் ஒரு பாலிசி திட்டம் குறித்து பார்க்கலாம். அதாவது எல்ஐசி நிறுவனத்தில் உள்ள தன் வர்ஷா (Dhan Varsha) திட்டத்தில் ஒற்றை பிரிமியம் மட்டுமே செலுத்த முடியும். இதில் உங்களுக்கு பாதுகாப்பு மற்றும் அதிகபட்ச சேமிப்பு தொகையும் கிடைக்கும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன்பாக நீங்கள் இறந்துவிட்டால் உங்களுடைய நாமினிக்கு முழு பணமும் கிடைக்கும்.

அதன்படி இந்த திட்டத்தில் உங்களுக்கு 35 வயது இருக்கும் போது 10 லட்சம் முதலீடு செய்து 15 ஆண்டுகள் முதிர்வு காலத்தை தேர்வு செய்து கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.‌‌ இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்து 10 வருடங்கள் ஆன நிலையில் ஒருவேளை நீங்கள் இறந்து விட்டால் ரூ. 91,49,500 உங்களுடைய நாமினிக்கு வழங்கப்படும். ஒருவேளை 15 வருடங்கள் கழித்து நீங்கள் இறந்து விட்டால் ரூ. 93,49,500 உங்கள் நாமினிக்கு கிடைக்கும். மேலும் முதிர்வு காலம் முடியும் வரை நீங்கள் உயிருடன் இருந்தால் 16 லட்சம் சேமிப்பு தொகையாக கிடைக்கும்.