நேற்று வெளியான அன்பென்னும் ஆயுதம் பாடலின் வாயிலாக லியோ படத்தின் கதையை கண்டறிந்து நெட்டிசன்கள் அதை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

அக்டோபர் 19-ல் வெளியாகியுள்ள லியோ  திரைப்படத்தின் மீதான  எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.  இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியான நாள் முதல் படத்தின் கதை எதுவாக இருக்கும் ? படம் LCU ல் இருக்கிறதா ? இல்லையா ? படத்தில் ஒரு விஜய்யா ? அல்லது இரண்டு விஜய்யா  ? என்ற பல கேள்விகளுக்கு ட்ரெய்லர் வாயிலாக ரசிகர்கள் விடை தேடி வருகின்றனர்.  அதில் மிகப்பெரிய குழப்பமாக படத்தில் ஒரு விஜய் தானா அல்லது இரண்டு விஜய்யா  என்ற குழப்பம் ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. 

அதற்கு காரணம்,  என்னை போல் இருக்கும் யாரோ ஒருவனால் தான் தனக்கு பிரச்சனை வருகிறது என்பது போல பார்த்திபன்   என்கிற கதாபாத்திரம் த்ரிஷாவிடம்  கூறுவது போன்ற காட்சி ஒன்று இடம் பிடித்திருக்கும்.  இதுவே படத்தில் இரண்டு விஜய் இருப்பதற்கான வாய்ப்பு உண்டா என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது.  இதன் அடிப்படையில் ட்ரெய்லரில் தேடிய போது,  பார்த்திபன் என்கிற கதாபாத்திரத்தில் இருக்கும் விஜய்க்கும் லியோ என்னும் கதாபாத்திரத்தில் இருக்கும் விஜய்க்கும் உள்ள ஒற்றுமைகள் என்னென்ன? என ரசிகர்கள் தேட,

  ட்ரெய்லரின் கடைசியில் விஜய் விசில் அடித்து நடந்து செல்லும் காட்சி ஒன்று இருக்கும். அதில்,  தனது இடது கையால் அவர் விசில் அடித்து சொல்வார்.  அதேபோல நேற்று வெளியான அன்பென்னும் ஆயுதம் பாடலில் விசில் அடிப்பது போன்ற ஒரு புகைப்படம் இடம்பெற்றிருக்கும்.  அதிலும்,  விஜய் இடது கையில் தான் விசில் அடிப்பார்.  இதுவே இவர்கள் இருவருக்கும் இடையான ஒற்றுமையாக கருதப்படுகிறது.  இதன் அடிப்படையில் தளபதி விஜய் அவர்கள் கடந்த கால வாழ்க்கையை மறைத்து அமைதியான வாழ்க்கையில் வாழ நினைக்கும் போது வரக்கூடிய பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதையாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.