இந்தோனேசியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. ரியாவு தீவில், ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் சுமார் 50 பேரை காணவில்லை. வானிலை சீரற்ற நிலையில் இருப்பதால் மீட்பு பணிகளும் சவாலாக உள்ளன. நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணியை விரைவுப்படுத்த நாளை ஹெலிகாப்டரை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.