நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டுக்காடு பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார் இவர் தனது குடும்பத்தினருடன் கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கையில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ரெட்டாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது எதிரே வந்த மற்றொரு கார் வாசுதேவனின் கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் வாசுதேவனின் மனைவி அருணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் வாசுதேவன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.