கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆண்டார்குளம் மேற்கு தெருவில் கூலி வேலை பார்க்கும் ராசையா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ராசையா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு மேரி என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று மேரி தனது மகளுடன் கோவிலுக்கு சென்றார்.

அப்போது குளியல் அறையில் ராசையா உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த மேரியும், அவரது மகளும் ராசையா உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராசையா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.