மகாராஷ்டிரா நாக்பூரிலுள்ள சக்ரதாரா பகுதியில் கொசு விரட்டியில் இருந்த ரசாயன திரவத்தை குடித்த 1 1/2 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சக்ரதாராவில் வசித்து வரும் தினேஷ் சவுத்ரி என்பவரின் ஒன்றரை வயது மகள் ரித்தி சவுத்ரி கொசு விரட்டி திரவத்தை எதிர்பாராத வகையில்  குடித்து உள்ளார். இதனை பார்த்த தினேஷ் உடனே அதை பிடிங்கி கைக்கு எட்டாத இடத்தில் வைத்துள்ளார்.

அதனை தொடர்ந்து ரித்திக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தினேஷ் உடனே ரித்தியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிறுமிக்கு சில மணி நேரம் சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று (பிப். 14) பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.