கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் -மே மாதங்களில் தேர்தல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மாநிலத்தில் ஏற்கெனவே பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை முடிவுசெய்வதற்குரிய கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டமானது நடந்தது.

அப்போது கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை, காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார். முன்பே போட்டியிட்ட அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.