பாஜக மூத்ததலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது “நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கு சென்று பார்க்கையில், மத்தியில் பா.ஜ.க மீண்டுமாக ஆட்சியமைத்து மோடி 3வது முறையாக பிரதமராவார் என்பதை தெரிந்துகொண்டேன். 1970ம் ஆண்டுக்கு பின் தொடர்ந்து 3-வது முறையாக ஒரு பிரதமர் மக்களின் தீர்ப்பை பெற்று மீண்டும் பிரதமராவது இதுவேயாகும்.

எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க 303 தொகுதிகளில் வெற்றிபெறும் என அக்கட்சியின் மூத்ததலைவர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், 1970 ஆம் ஆண்டுக்கு பின் தொடர்ந்து ஒரு கட்சி மக்களின் ஆதரவோடு 3-வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கப் போகிறது. நாட்டின் அடுத்த பிரதமர் மோடி என்றார்.