தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் EVKS இளங்கோவன்பேட்டி அளித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான EVKS இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இது போன்ற கூட்டங்கள் என்று சொன்னால்,  எங்களை போன்றவர்களையெல்லாம் அழைப்பது வழக்கம். இன்றைக்கு யாரையும் கூப்பிடாமல் ஒரு கூட்டத்தை நடத்தி இருக்கின்றார்கள். என்ன மர்மமான கூட்டமோ என்னவோ எனக்கு தெரியவில்லை. என்ன நடந்தது என்பதை விசாரித்து நான் சொல்லுகின்றேன்?

எனக்கு உண்மையாவே தெரியாது. நேத்து கூட்டம் என்று எனக்கு தெரியாது. ஆனால் இன்னைக்கு நேத்து கூட்டத்தை காலையில் பத்திரிகையில் பார்த்து தான் நான் தெரிந்து கொண்டேன். எனக்கும் தெரியாது,  தங்கபாலுவுக்கும் தெரியாது,  திருநாவுக்கரசுக்கு தெரியாது.  புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று சொல்லவில்லை.  முதலில் முன்னாள் தலைவர்கள் என்று சொன்னார்கள், அடுத்து மூத்த தலைவர்கள் என்று சொன்னாங்க. இப்ப முடிஞ்சு போன தலைவர்கள்ன்னு சொல்றாங்க அவ்வளவுதான் என்ன அதிருப்தி தெரிவித்தார்.