கோடநாடு வழக்கில் தவறு செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோடநாடு வழக்கு குறித்து வைத்தியலிங்கம் கொண்டு வந்த கவன  ஈர்ப்பு தீர்மானதிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். கொடநாடு வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல் ஆகும். கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் யார் என்பது மிக விரைவில் தெரியவரும்.  குற்றவாளிகள் எப்படிப்பட்ட இடத்தில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் முதல்வர் ஸ்டாலின்  பேரவையில் தெரிவித்துள்ளார்.