பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் அண்மையில் டெல்லியை சேர்ந்த ஆதில் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தனது கணவர் ஆதில் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். தனது பணம் மற்றும் நகையை திருடிவிட்டதாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆதில் கான் மீது ஐபிசி 406 & 420 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று ராகி சாவந்த் தனது கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னை மனரீதியாக மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் ஊடகங்களில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருமணத்தை அறிவித்த ஒரே மாதத்தில் தனது கணவரைப் பிரிந்து விட்டதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ராக்கி சாவந்த்.