பிரபல சினிமா எடிட்டரான ஸ்ரீ ஜிஜி கிருஷ்ணா ராவ் பெங்களூருவில் மரணமடைந்தார்(53). இவர் 200-க்கும் அதிகமான திரைப்படங்களில் எடிட்டராக பணிபுரிந்துள்ளார். அதாவது, பழம்பெரும் டைரக்டர்கள் கே.விஸ்வநாத், பாபு, ஜந்தியாலா, தாசரி நாராயண ராவ் உட்பட பலரது படங்களில் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.

சினிமா மீதுள்ள ஆர்வம் காரணமாக பல படங்களில் இணை இயக்குனர் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் வேலைகளையும் செய்துள்ளார் ஸ்ரீ ஜிஜி கிருஷ்ணா ராவ். அதோடு கமல்ஹாசன் நடிப்பில் சென்ற 1983 ஆம் வருடம் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற சலங்கை ஒலி மற்றும் ஏழுமலையான் மகிமை ஆகிய தமிழ் படங்களிலும் எடிட்டராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.