மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர் விஷ்ணு இடவன். அதோடு இவர் லோகேஷ் கனராஜ் படங்களுக்கு பாடல் ஆசிரியராகவும் பணிப்புரிந்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்தில் பொளக்கட்டும் பற பற, விக்ரம் படத்தில் வந்த போர்கண்ட சிங்கம் மற்றும் நாயகன் மீண்டும் வரான் உள்ளிட்ட பாடல்களை இவர் எழுதி உள்ளார்.

இதற்கிடையே விஷ்ணு இடவன் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அப்பெண்ணை கர்ப்பமாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. அதனை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் விஷ்ணு இடவன் திடீரென்று அப்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பின் சென்னை திருமங்கலத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் புகாரளித்துள்ளார்.