
ராமேஸ்வரம் அருகே மண்டபம் கோயில் வாடி மீன்பிடி தளத்திலிருந்து நேற்று காலை 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் மதியம் வரை கரைக்கு திரும்பாததால் சக மீனவர்கள் கடலுக்குள் சென்ற மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை மாயமான 4 மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள். இது தொடர்பாக மண்டபம் மீன்வளத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் காற்றின் திசையில் படகு நகர்ந்து இலங்கை கடல் பகுதிக்குள் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.