இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளது. அதாவது, சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் ரூ.5 கோடி மதிப்பில் அரசு கருத்தரிப்பு மையங்கள் செப்டம்பர் மாதத்தில் நிறுவப்பட உள்ளது என்று சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.