அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் செயல்பட தடை கோரிய வழக்கு ஏப்ரல் 20-ல் நடைபெறுவதாக இருந்த நிலையில், நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஓபிஎஸ் தரப்பு முறையீட்டை ஏற்று நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கின்றனர். ஏப்ரல் 16ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் ஓபிஎஸ் தரப்பில் அவசரமாக முறையீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.