தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் மின்னல் வெட்டு இடி விழுதல் போன்ற சம்பவங்களும் நடக்கிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அட்டாப்பூர் பகுதியில் இளைஞர் ஒருவர் வீட்டில் இருந்து வெளியில் வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் சென்ற அடுத்த நொடி அவர் கடந்து சென்ற சாலையில் இடி விழுந்துள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி ஜஸ்ட் மிஸ் என்று அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.