வீரப்பன் கூட்டாளியான மீசை மாதையன் உடல் நலக்குறைவால் மைசூரு அரசு மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ளார். 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த மாதையன் கடந்த 11ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்தார். 2014ம் ஆண்டு மாதையன் உள்பட 4 பேருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.

சைமன், பிலவேந்திரன் ஆகியோர் மைசூரு சிறையிலேயே உயிரிழந்தனர். 1993ம் ஆண்டு கர்நாடக போலீசில் சரணடைந்த மாதையன் மீது 4 தடா வழக்குகள் பதிவாகின. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் மேல்முறையீட்டில் தூக்கு தண்டனையானது குறிப்பிடத்தக்கது.