சென்னை மாநகராட்சியில் காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சுகாதார ஆய்வாளர், மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியான நபர்கள் மார்ச் 7-ம் தேதிக்குள் அதாவது நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். அதன் பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களை இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்னை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கலாம். அதன்படி member secretary, CCHUM/City health officer, public health department, greater Chennai corporation, 3rd floor, Aman Malikai, ribbon buildings, Chennai 3 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.‌