இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்ல பாகிஸ்தான் பிளேயர் போகும்போது ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம்  போட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,  நான் இதுக்கு பதில் ஒற்றை வரியில் சொல்லனும்னா… ஜெய் ஸ்ரீ ராம்…. ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்…ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்…ஜெய் ஸ்ரீ ராம்… என சொல்லிவிட்டு கடந்து சென்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கிரிக்கெட் திடல் கட்டுகிறார்  அல்லவா ? அதை உடுக்கை மாறியும்,  விளக்கு கம்பங்களை எல்லாம் சூலம் மாதிரியும்,  இப்படி கட்ட ஆரம்பிக்கும்போது ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போடு.  நாளைக்கு  இன்னொரு நாட்டுல…  இஸ்லாமிய நாட்டுல அல்லாஹ்வுக் அக்பர் என்று கத்துவான்.

கிறிஸ்தவ நாட்டுல போனா ஓ மை ஜீசஸ்,  ஓ மை லார்ட் ஜீசஸ் அப்படின்னு கத்துவான். இது எல்லாம் வந்து ரொம்ப கொடுமை.  ரொம்ப கொடுமை..  ராமருக்கும்,   கிரிக்கெட்டுக்கும்  ஏதாவது சம்பந்தம் இருக்கா? ராமருக்கும்,  கிரிக்கெட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? 

விளையாட்டு,  விளையாட்டு தான். விளையாட்டில் இல்லாததெல்லாம் பகைன்னு நீ பார்த்தீங்கன்னா ..உனக்கு பேச அருகதை இருக்கா? நான் எத்தனை தடவை கேட்கிறேன். என்னோட தர்க்கத்துக்கு நேரா வந்து இருக்கலாம்,  இல்லன்னா… எதிர்த்தாவது பேசி இருக்கலாம் என தெரிவித்தார்.