காசாவில் முப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது

காஸாவின் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் தெற்கு பகுதிக்கு செல்ல 3 மணி நேரம் பாதை திறக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவிலிருந்து வெளியேறுவதற்கான பாதை 3 மணி நேரத்திற்கு விரைவில் திறக்கப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தவுள்ளதை முன்னிட்டு பாலஸ்தீனர்கள் வெளியேறி வரும் நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.காசாவின் வடக்கு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர்.

இந்திய நேரப்படி 12.30 முதல் 3.30 வரை பாதுகாப்பான வழி தடத்தை பயன்படுத்த மக்களுக்கு இஸ்ரேல் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. வடக்கு காசா பகுதியை விட்டு தெற்கு காசா பகுதிக்கு செல்லுமாறு ஏற்கனவே இஸ்ரேல்  தெரிவித்துள்ளது. ஃபைட் ஹலோன் – கான் யூனிஸ் வழித்தடத்தில் 3 மணி நேரம் எவ்வித தாக்குதல் நடத்தப்படாது என  இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எல்லையில் இஸ்ரேல் தரைப்படை வீரர்கள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகின்றனர்.  விரைவில் காசாவின் தரைவழி தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபடுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இஸ்ரேல் படைகளுக்கு உதவும் வகையில் ஆயுதங்களுடன்  2ஆவது விமானத்தை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக ஐநாவில் வாக்கெடுப்பு நடத்த ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. காசாவில் முப்படைகளை கொண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல்  திட்டமிட்டுள்ள நிலையில் இறுதி எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.