விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த ஆறு சீசர்களை வெற்றிகரமாக கடந்துவிட்ட நிலையில் தற்போது ஏழாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பிரபலங்கள் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பாகவே சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி விடுவார்கள்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழமைக்கு மாறாக இலங்கையில் இருந்து ஒரு பிரபலம் தேர்வு செய்யப்படுவார். அதன்படி கடந்த சீசன்களில் லாஸ்லியா மற்றும் ஜனனி ஆகியோர் இலங்கை பிரபலங்களாக கலந்து கொண்டனர். இந்த முறை கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் விவரங்கள் வெளியான நிலையில் சிலரின் பெயர் மட்டும் ரகசியமாக உள்ளது. இதனை தொடர்ந்து ஜனனியை போல இருக்கும் பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் இலங்கையில் இருக்கும் திறமைமிக்க கலைஞர்கள் வெளிப்படுவார்கள் என இலங்கை பிக் பாஸ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதே சமயம் இந்த முறை இலங்கை பிரபலமான பீஸ்ட் நடிகை காயத்ரி சான் அவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.