உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் நடந்த ஒரு கோர விபத்து, சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலை கிளப்பியுள்ளது. ஒரு பைகில் வந்த இருவர், கிராம சாலை வழியாக முக்கிய சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த பிக்கப் வேன் நேருக்கு நேராக மோதியது. இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிடிவியில் தெளிவாக பதிவாகியுள்ளது.

 

காட்சிகளில், வலது பக்கம் இருந்து வந்த பிக்கப் வேன் திடீரென மோட்டார் சைக்கிளை மோதும் காட்சி உள்ளதை காணலாம். அதில் வீழ்ந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு, சாலையில் பலத்த காயங்களுடன் பிழைத்தனர். அதிகமாக கோபத்தை ஏற்படுத்தியது என்னவென்றால், வாகன ஓட்டுநர் விபத்து நடந்ததும் திரும்பிப் பார்க்காமல், வாகனத்தை நிறுத்தாமல் காயமடைந்த இருவரையும் சாலையில் விட்டுவிட்டு வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றார்.

விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஓடிவந்து இருவருக்கும் உதவினர்.  இதையடுத்து அவர்கள் இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் தற்போது குறித்த பிக்கப் வேனையும், ஓட்டுநரையும் அடையாளம் காண நடவடிக்கை எடுத்துள்ளனர். ஹூசைங்கஞ்ச் காவல் நிலையம் சார்பில், “விபத்து தொடர்பான தகவலின் பேரில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளனர்.