
ஈரான், இஸ்ரேல் இடையே தற்போது தாக்குதல் நடந்து வரும் நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஈரான் பேச்சு வார்த்தைக்கு தற்போது இடமில்லை என்று தெரிவித்துவிட்டது. அதாவது ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக இருப்பதால் இஸ்ரேல் ஈரானின் அணு உற்பத்தி நிலையங்களின் மீது அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இதனால் போர் தீவிரமாகும் நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் ஈரானின் ராணுவ அதிகாரி ஜெனரல் மொஹ்சென் ரெசா இஸ்ரேல் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான், இஸ்ரேல் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தும் என்று கூறியுள்ளார். மேலும் ராணுவ அதிகாரியின் கருத்திற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.