மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. ஆர்சிபி அணியில் மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 68 ரன்களும், டூ பிளசிஸ் 41 பந்துகளில் 61 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இதனையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்களில் அவுட் ஆனார். இஷான் கிஷன் 21 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். இதனையடுத்து 3-வது விக்கெட்டுக்கு சூரியகுமார் யாதவ் மற்றும் நேஹால் வதேரா ஜோடி களம் இறங்கியது. இந்த ஜோடி 140 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் 35 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். இறுதியில் மும்பை அணி 16.3 ஓவரில் 200 விக்கெட் எடுத்து அபார வெற்றி பெற்றது. மேலும் இதன்மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.