இலங்கையை வீழ்த்தி 2023 ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றுள்ள நிலையில், அடுத்ததாக வரும் 22ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதல் 2 ஒருநாள் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் 3வது ஒருநாள் போட்டியில் விளையாடுவார்கள். அதேபோல ருதுராஜ் கெய்க்வாட் முதல் 2 போட்டிகளில் இடம் பெற்றுள்ளார். காயத்தால் அவதிப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் அணியில் இடம் பெற்றுள்ளார். அதேபோல தமிழக வீரர்  வாஷிங்டன் சுந்தரும் 3 போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான அணி :

கே.எல்.ராகுல் (சி & டபிள்யூ.கே), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ஆர் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா (கே), ஹர்திக் பாண்டியா, (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல்*, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஆர் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ்.