பிலிப்பைன்ஸில் வசித்த இந்தியாவை சேர்ந்த கபடி பயிற்சியாளரின் வீட்டிற்குள் நுழைந்து மர்மநபர்கள் அவரை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய நாட்டின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 43 வயதுடைய குர்பிரீத் சிங் கிந்துரு, நான்கு வருடங்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் குடியேறினார். கபடி பயிற்சியாளராக இருந்து ஓய்வு பெற்ற அவர் மணிலாவில் பணி முடிந்த பிறகு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது திடீரென்று மர்ம நபர்கள் அவரின் குடியிருப்பிற்குள் நுழைந்து அவரை துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், அவரின் தலையில் பலமான காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் கொல்லப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. எனினும், சமீப நாட்களாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இந்திய வம்சாவளியினர் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் அதிகரித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.