மக்களவைத் தேர்தலில் INDIA கூட்டணி வெற்றிபெற்றால் ஆண்டுக்கு ஒரு பிரதமர் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர் எனப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் துணை முதல்வரை முதல்வராக்கத் திட்டமிட்டுள்ளதைப் போல, இந்தியாவிற்கு ஐந்து பிரதமர்களைக் கொண்டுவர காங்., தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது எனக் கூறினார்.