நியூ மெக்சிகோவில் வாம்பயர் ஃபேஷியல் செய்துகொண்ட 3 பெண்கள் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாடு & தடுப்பு மையம் நடத்திய விசாரணை அறிக்கையில், ஏற்கெனவே பயன்படுத்திய ஊசிகளை பயன்படுத்தியதன் காரணமாக எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டிருக்கலாமெனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஃபேஷியலில், ரத்தத்திலிருந்து பிரித்து எடுக்கப்படும் பிளேட்லெட்டுகளை முகத்தில் செலுத்தி சிகிச்சை அளிப்பர்.