கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது பெயர் அஃபான். இவரது தந்தை சவுதி அரேபியாவில் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இவரின் கடன் சுமை அதிகமானதால் அஃபான் தனது  குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தந்தையின் கடனை அடைப்பதற்காகவும், தம்பியை படிக்க வைப்பதற்காகவும் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார். தனது தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல கூட பணம் இல்லாமல் தனது உறவினர்களிடமும் கடன் வாங்கி உள்ளார். இவ்வாறு தொடர்ந்து கடன் சுமை அதிகரிக்கவும் கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு தொல்லை கொடுத்ததால் மிகவும் வருத்தத்துக்கு ஆளாயினார்.

அப்போது அவர் திடீரென தன்னுடைய தாயை போர்வையால் மூடி தலையைப் பிடித்து சுவரில் இடித்தார். இதில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில் பின்னர் பாட்டியின் வீட்டிற்கு சென்று தான் கொண்டு வந்த சுத்தியலால் அவரை அடித்து கொலை செய்தார். அதன் பின் உறவினரான லத்திப் மற்றும் சஜிதா வீட்டுக்கு சென்று அவர்களையும் சுத்தியால் அடித்து கொலை செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார்.

தனது காதலியுடன் வீட்டிற்கு திரும்பிய அஃபான் வீட்டுக்கு வெளியே காத்திருந்த தம்பி அஃப்சானை அழைத்து சென்றார். அப்போது அவர்கள் இருவரையும் வீட்டினுள் வைத்து கொலை செய்துவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் விஷம் குடித்துவிட்டு காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவங்களை கூறி சரணடைந்தார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் மனநல பிரச்சனையின் காரணமாகவும், குடும்பத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பில் இருந்ததாலும், கடன் சுமை அதிகரித்தாலும் குடும்பத்தில் இருந்த அனைவரையும்  கொலை செய்தது தெரிய வந்தது. மன அழுத்தம் மற்றும் சமூக அழுத்தம் தான் இந்த கொலைக்கு காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.