அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லுபடி ஆகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளர் ஆக மாறுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் பொதுக்கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற இருக்கிறது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்து நேற்று எடப்பாடி பழனிச்சாமி கட்சி அலுவலகத்தில் வைத்து அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தலைமைச் செயலகத்தில் தொடங்க இருக்கிறது. இந்த கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. மேலும் நிரந்தர பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கான பொதுக்குழுவை நடத்துவது குறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வதோடு அதற்கான தேதியையும் இன்று முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.