தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு பணியாளர்களை குத்தகை முறை பணிக்கு மாற்றக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்பிறகு அவர்களுக்கு பணிநிலைப்பு ஆணை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் 15 வருடங்களாக தினக்கூலிகள் ஆக பணியாற்றியவர்களை அவர்களுக்கே தெரியாமல் தற்போது குத்தகை பணியாளர்களாக மாற்றியது கண்டனத்திற்குரியது. எனவே தினக்கூலி பணியாளர்களை குத்தகை  ஒப்பந்த பணியாளர்களாக மாற்றிய ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.