
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீமானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சீமானுக்கு கொலை மிரட்டல் கொடுக்கும் வகையில்இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் பதிவு வெளியிட்டுள்ளதாக புகார் அளித்துள்ளது. அந்த ஸ்டோரி பதிவில் சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும். விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என்று பதிவிட்டுள்ளதாக புகார் அளித்துள்ளது.
இந்நிலையில் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.