ஐடிஐயின் தரத்தை சீர்குலைக்கும் நோக்கில் புதிய தொழிற்கல்வி கொள்கையை மத்திய அரசு புகுத்துகிறது என்று சிபிஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். மேலும் கணிதம் மற்றும் வரைபடம் பாடத்திட்டம், பயிற்சி நேரம் குறைப்பு, தேசிய தகுதித்திறன் குறைப்பை உடனே திரும்ப பெறவேண்டும். புதிய தொழிற்கல்வி கொள்கையால் ஐடிஐ பயில்வோர் தொழில்நுட்ப அறிவு, நிபுணத்துவம் பெற மாட்டார்கள் என சிபிஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.