பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அஜய் தேவகன். இவர் தற்போது கைதி ரீமேக்காக இந்தியில் உருவாகியுள்ள போலோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது. இதன் காரணமாக போலோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக அஜய் தேவகன் மற்றும் தபு ஆகியோர் தி கபில் ஷர்மா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது ஆர்ஆர்ஆர் படத்திற்கு தன்னால்தான் ஆஸ்கார் விருது கிடைத்தது என்று அஜய் தேவகன் கூறினார்‌. உடனே எப்படி என்று கபில் கேட்க நாட்டு நாட்டு பாடலுக்கு நான் நடனமாடி இருந்தால் ஆஸ்கார் விருது கிடைத்திருக்குமா என அஜய் தேவகன் கேட்டார். அதாவது அஜய் தேவனுக்கு சரியாக நடனம் வராது. ஒருவேளை தான் நடனம் ஆடியிருந்தால் ஆஸ்கார் விருது கிடைத்திருக்காது என்பதைத்தான் நகைச்சுவையாக அஜய் தேவகன் அப்படி கூறினார். மேலும் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ராம் சரணுக்கு தந்தையாக அஜய் தேவகன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.