நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் ஒன்றைத் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக சீமானுக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்திலிருந்து நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன்  அனுப்பப்பட்டது.  அந்த சம்மனுக்கு வழக்கறிஞர் மூலமாக  இரண்டு நாட்களுக்கு முன்பு நேரில் விளக்கம் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் தான் மீண்டும் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல்துறை சார்பாக சீமானுக்கு இரண்டாவது சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக பல்வேறு கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் சீமான் அவர்கள் காவல்துறைக்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். கட்சி நிகழ்வுகள், மக்களில் பிரச்சனைகள் இருப்பதால் ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு முக்கியமானது.  என் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகியோரும் அதேபோன்று நானும் நீங்கள் குறிப்பிட்ட தேதியில் வர சொல்ல வேண்டும். நான் வரத தயாராக இருக்கிறேன்.

மூவரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தி இதற்கான தீர்வு காண வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த   மாதிரியான முடிவை காவல்துறை அதிகாரிகள் எடுக்க இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். இன்று சரியாக 12 மணிக்கு மேலாக வீரலட்சுமி அவர்களும் ஒரு புகார் கொடுக்க வந்திருந்தார். அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக புகார் கொடுக்கப்பட்டு அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.