தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகராக இருப்பவர் கார்த்திக் ராஜ். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொடரின் மூலம் பிரபலமான கார்த்திக் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் கார்த்திக் ராஜ் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கார்த்திக்குக்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை என சில மீம்ஸ்கள் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து ஒரு பேட்டியில் கார்த்திக்ராஜ் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நான் பிறந்திருக்கவே கூடாது. நான் பிறந்ததால் தான் இவ்வளவு கஷ்டம் வந்து கொண்டிருக்கிறது. பிறக்காமல் இருந்திருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. நம்மிடம் யாரும் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். மேலும் நாம் செய்யும் தவறு யாரும் பெரிதாக பேச மாட்டார்கள் என்று உருக்கமாக கூறியுள்ளார்.