யானைகள் என்றாலே எப்போதும் ஒரு குறும்புத்தனம் இருக்கத்தான் செய்யும். ஒடிசாவில் மைதானம் ஒன்றில் ஒரு இளைஞர் குழு கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது எங்கிருந்தோ வந்த காட்டு யானை ஒன்று நேராக மைதானத்திற்குள் ‘என்ட்ரி’ கொடுத்தது.
யானையைப் பார்த்ததும் பயந்துபோன இளைஞர்கள், அது எப்போது அங்கிருந்து செல்லும் எனத் தூர நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அந்த கஜராஜனோ அங்கிருந்து செல்வதாகத் தெரியவில்லை. மாறாக, மைதானத்தில் கிடந்த கால்பந்தை ஆர்வத்துடன் பார்த்தது.
When football fever hits even the wild!!
An unforgettable moment from Keonjhar, #Odisha, where an elephant joined a group of boys to play football.
Pure magic. Pure Odisha. 💚 pic.twitter.com/g5ZfqZ9H0G
— Manas Muduli (@manas_muduli) January 7, 2026
யாரும் எதிர்பார்க்காத வகையில், தனது தும்பிக்கையாலும் கால்களாலும் பந்தை மெல்லத் தட்டிப்பார்த்த யானை, திடீரென ஒரு பலமான ‘கிக்’ அடித்தது. பந்து காற்றில் பறந்து செல்வதைப் பார்த்த இளைஞர்கள் உற்சாகத்தில் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
யானைக்கும் கால்பந்து காய்ச்சல் தொற்றிக்கொண்டதா? எனப் பலரும் இந்த 25 விநாடி வீடியோவை ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான இந்த அழகான மற்றும் அமைதியான தருணம் சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது.
