தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த திருமணமான 25 வயது இளம்பெண் தனது குடும்பத்தினருடன் கடந்த 28-ஆம் தேதி கோவைக்கு சுற்றுலா வந்தார். அவர் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஈஷா யோகா மையம் செல்வதற்காக காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணுடன் அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் இளம்பெண்ணுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சந்தோஷ் என்பது தெரியவந்தது. அவர் கோவையில் இருக்கும் ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.