திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் பொது மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் தேரடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மழைநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.