திரிபுரா மாநிலத்தில் மைனர் சிறுமியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திரிபுராவில் வசிக்கும் காயாமியா என்ற நபருடன் தனுஜா பேகம் என்ற மைனர் சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகும் நிலையில் சிறுமி தினந்தோறும் தன்னுடைய அம்மாவுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் திடீரென மகளிடமிருந்து போன் வராததால் பதறிய தாய் மகளின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது அங்கு வீட்டில் திட்டு திட்டாக ரத்தங்கள் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் நடு ரோட்டில் கதறி அழ அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் கணவர் காய மியாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தன்னுடைய மனைவியைதுண்டு துண்டாக வெட்டி கொலை செய்ததாகவும் தலையை ஒரு பையிலும் உடல் பாகங்களை மற்றொரு பயிலும் வைத்து காட்டுக்குள் வீசியதாகவும் கூறியுள்ளார். மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.