கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 15-ஆம் தேதி சனிக்கிழமை முதல் குரூப்-1 குரூப்-2 முதல்நிலை தேர்வுக்காக இலவச வகுப்பு தொடங்கி நடைபெற உள்ளது.

காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் பயிற்சி வகுப்பு நடைபெறும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9499055908 என்ற தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளலாம். இந்நிலையில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் இருப்பவர்கள் பாஸ்போர்ட் அளவு இரண்டு புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.