கர்நாடக சட்டசபைக்கு வருகிற  மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி நாளை தூமகூருவில் உள்ள எச்.ஏ.எல் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள பசுமை கள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணிக்கிறார். இதில் ராணுவ மந்திரி ராஜ்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

கடந்த 2016 -ஆம் ஆண்டு பெங்களூரில் இருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலை அமைப்பதற்கான அடிக்கல்லை  பிரதமர் மோடி நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தொழிற்சாலையில் 20 ஆண்டுகளில் மூன்று டன் முதல் 15 டன் எடை வரை கொண்ட ஆயிரம் ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.